ஆத்தூர், மார்ச் 29: ஆத்தூர் வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆத்தூர் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 26ம் தேதி வள்ளி, தெய்வானைவுடன் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, மூலவருக்கு பால், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் மூலவரை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.