மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் உலக காசநோய்தினம் கடைபிடிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். காசநோய் தப்பு பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ராஜா வரவேற்றார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்ராஜசேகர் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், இந்திய மருத்துவக்கழகத்தினர், பிளாக் மெடிக்கல் அதிகாரி சரத்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் காளி, ஆக்கூர், திருவெண்காடு, நல்லூர் போன்ற மையங்களிலிருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.