சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் நகர் வடக்கு பகுதி 128வது வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரபாகர் ராஜா, திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும். மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறும் பகுதிகள் சீரமைக்கப்படும். 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.