சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து நேற்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அசன் மவுலானா பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘வேளச்சேரி தொகுதி மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் கட்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது. என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க உங்களின் குரலாக சட்டசபையில் ஒலிப்பேன். விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலத்தில் 12 கி.மீ., பாலத்ைத முதல்வர் சர்வ சாதாரணமாக கட்டி முடித்தார். ஆனால் இங்கு 2 கி.மீட்டர் பாலத்தை கட்டுவதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறார். இத்தனை ஆண்டுகளாகியும் பாலப்பணிகள் முடிவடையவில்லை என்றால் வேளச்சேரி மக்கள் அவருக்கு பிரதானமாக தெரியவில்லை.