புழல்: சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றியம் நெற்குன்றம், சோத்துபெரும்பேடு, காரனோடை ஆகிய ஊராட்சிகளில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில்,“நெற்குன்றம், சோத்துபெரும்பேடு, காரனோடை ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள ஆறு அரசு பள்ளிகளூக்கு சுற்றுச்சுவர் கட்டி தந்துள்ளேன். அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், நெற்குன்றம் பகுதியில் கலையரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 2 அரசு பள்ளி வளாகத்தில் புதிதாக சத்துணவு கூடம் கட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். சட்டசபை நடைபெறும் நாட்களில் அனைத்து நாட்களிலும் சென்று மக்களின் பிரச்னைகளை குறித்து கேள்வி எழுப்பி, பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன்.