சாத்தூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தூர், மார்ச் 25: சாத்தூரில் நகராட்சி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் நைட்ரஜன் காற்று நிரப்பட்ட, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாசகம் எழுதிய மூவர்ண பலூன்களை கலெக்டர் கண்ணன் பறக்க விட்டார். பின் மாணவர்களின் பேரணியை துவக்கி வைத்தார். இதன் பின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குநர் ஜெயக்குமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், வட்டாட்சியர் வெங்கடேஷ்  கலந்து கொண்டனர்.

Related Stories: