பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தினசரி பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், என்.ஆர்.தனபாலனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலிருந்து மகாகவி பாரதி நகர் முல்லை நகர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சாமணியர்களாக இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொடுத்து மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றனர். இந்த தொகுதியில் மகளிர் அதிகம் உள்ளனர்.