சாத்தூர், மார்ச் 24: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மன் எம்.எல்.ஏ, தொகுதிக்கு உட்பட்ட வாழவந்தாள்புரம், சாமியார்காலனி, சிலோன் காலனி, ராமலிங்காபுரம், அம்மாபட்டி, பெரிய, சின்ன கொல்லபட்டி, சடையம்பட்டி, சத்திரபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ராஜவர்மன் எம்.எல்.ஏ பேசியதாவது: சாத்தூர் தொகுதி மக்களின் நலன் காக்க கொரோனா காலத்தில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள் வழங்கியுள்ளேன். பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து குடிநீர் பற்றாக்குறையை தீர்த்தேன். தீப்பெட்டி தொழிலாளர்களை பாதுகாக்காக்க தனிவாரியம் அமைப்போன்.