நீடாமங்கலம் அருகே காரிய அழகர் அய்யனார் கோயில் திருவிழா

நீடாமங்கலம், மார்ச் 23: நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள காரியஅழகர் அய்யனாருக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சாம்பான் மூர்த்திகள், கருப்பன்னசாமி, மதுரைவீரன், முனீஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காரிய அழகர்சாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் சுற்றி வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இக்கோயிலில் திருவள்ளுவர் நகர் வாசிகள் சார்பில் வரும் 28ம் தேதி பால்குடம் எடுத்தல், அய்யனாருக்கு அபிஷேக ஆராதனை, குதிரை எடுத்து வருதல், மாவிளக்கு பூஜை, காரியஅழகர் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 29ம்தேதி காப்பு களைத்தல், 30ம்தேதி விடையாற்றி உள்ளிட்ட 10 நாள் திருவிழா நடைபெறுகிறது.

Related Stories: