தஞ்சை, மார்ச் 23: தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள், பொது இடங்களில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.