நெல்லை, மார்ச் 21: நெல்லை டவுனில் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். நெல்லை டவுன் கரியாமாணிக்க பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் காலை பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை பல்வேறு வாகனங்களில் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு வீதியுலா நடந்தது.