நெல்லை, மார்ச் 21 : நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகை உலுக்கிய கொரோ கடந்த ஆண்டு நவம்பர் இறுதிவரை ஓரளவு குறைந்துவந்தது. பின்னர் டிசம்பர் முதல் மீண்டும் பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனாவாக தாக்கி வருகிறது. தமிழகத்திலும் 2ம் கட்ட கொரோனா பரவி வருகிறது. இதன் தாக்கம் நெல்லையிலும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 14 பேருக்கு பரவிய நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது.