திருப்பரங்குன்றம், மார்ச் 21: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சமூக அறிவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை கட்டிடத்திற்கு வெகுகாலமாக அம்பேத்கர் மாளிகை என்ற பெயர் சூட்டப்பட்டு அதன் முகப்பில் பெயர் பொறிக்கப்பட்டும் இருந்தது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் அப்பெயர் பலகை விழுந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது தேசிய தர மதீப்பீட்டு குழுவினரின் வரவை ஒட்டி கட்டிடம் புதுபிக்கப்பட்டபோது அப்பெயர் பலகை இருந்த இடம் தெரியாமல் நீக்கப்பட்டு துறைகளின் பெயர் மட்டுமே `பளிச்’ என்று எழுதப்பட்டுள்ளது.