காமராஜர் பல்கலைக்கழக துறை கட்டிடத்திற்கான அம்பேத்கர் மாளிகை பெயர் நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது : பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்

திருப்பரங்குன்றம், மார்ச் 21: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சமூக அறிவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை கட்டிடத்திற்கு வெகுகாலமாக அம்பேத்கர் மாளிகை என்ற பெயர் சூட்டப்பட்டு அதன் முகப்பில் பெயர் பொறிக்கப்பட்டும் இருந்தது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் அப்பெயர் பலகை விழுந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது தேசிய தர மதீப்பீட்டு குழுவினரின் வரவை ஒட்டி கட்டிடம் புதுபிக்கப்பட்டபோது அப்பெயர் பலகை இருந்த இடம் தெரியாமல் நீக்கப்பட்டு துறைகளின் பெயர் மட்டுமே `பளிச்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி கூறுகையில், இக்கட்டிடத்திற்கு அம்பேத்கர் மாளிகை எனும் பெயரை சூட்டியதற்கு காரணம், பல வருடங்களுக்கு முன் பல்கலைக்கழக மானியக்குழு அம்பேத்கர் பெயரால் கட்டிடம் கட்டக் கொடுத்த சிறப்பு நிதியில் உருவானது தான் காரணம். அக்கட்டிடம் அம்பேத்கர் பெயரைத் தாங்கியிருப்பது போல வளாகத்தில் பல அரங்குகள் மு.வா அரங்கு, பி.டி.ஆர் அரங்கு, சர்.சி.வி

Related Stories: