கெங்கவல்லி, மார்ச் 20: ஆத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து எஸ்ஐ தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான நேற்று, பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, திமுக சார்பில் சின்னதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக திமுக நிர்வாகிகள் ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன் திரண்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து எஸ்ஐ ரவி, அவ்வழியே சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, இவ்வழியாக செல்லக்கூடாது என கூறி தடுப்பு கம்பியை வைத்தார். அதனை கட்சியினர் தட்டிக்கேட்ட போது, திமுகவினர் யாரும் அந்த வழியாக செல்லக் கூடாது எஸ்ஐ ரவி கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.