ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஓசூர், மார்ச் 20: ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ணரெட்டிa போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை வகித்தார். அப்போது, அவர் பேசுகையில், அதிமுக அரசு தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நான் அமைச்சராக இருந்தபோது ஓசூர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மேலும், பல திட்டங்களை கொண்டுவர அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முனுசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, நகர செயலாளர் நாராயணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், இணை செயலாளர் ஜேபி(எ) ஜெயப்பிரகாஷ், துணை செயலாளர் முருகன், பாஜ மாவட்ட தலைவர் நாகராஜ், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசலு, பாமக முன்னாள் தலைவர் முனிராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்ராஜன், தமாகா நிர்வாகி கேசவரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: