திருவாரூர், மார்ச் 20: அதிமுக ஆட்சி ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தொகுதி முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொகுதிக்குட்பட்ட கொல்லாபுரம் பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய சமூகத்தினரிடம் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி அரசும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. சிறுபான்மையினர் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.