மதுரை, மார்ச் 20: மதுரை வடக்குதொகுதியில் மதுபாட்டில்களுடன் சங்கரபாண்டி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி நாளான நேற்று பலரும் மனுதாக்கல் செய்தனர். இத்தொகுதியில் மட்டும் 10பேர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை யாகப்பா நகரை சேர்ந்த அபுபக்கர்சித்திக் திருவோடு கையில் ஏந்தியபடி பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்திருந்தார்.