சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளி பிளஸ் 2 தேர்வு மையமானது

தேவதானப்பட்டி, மார்ச் 19:  தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 1,700 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, அருகில் உள்ள தேவதானப்பட்டிக்கு சென்று வந்தனர். இந்நிலையில், இந்த பள்ளியை பொதுத்தேர்வு மையமாக அறிவிக்க கோரிக்கை எழுந்தது. இதையேற்று நடப்பாண்டில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் மோகன், உதவி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர், தேனி முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினியிடம் புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Related Stories: