சென்னை: ஜவுளி மற்றும் தோல் பதப்படுத்துதல் தொழில்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?, என்று மக்களவையில் திமுக எம்பி, டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார். திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷிடம், மத்திய அரசின் சுயசார்பு திட்டத்தின் கீழ், தயாரிப்பு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கொள்கைக்கு மாறாக, ஜவுளி மற்றும் தோல் பதப்படுத்துதல் தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றனவா, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, அரசு ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளதா என விரிவான கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர், ஜவுளி மற்றும் தோல் பதனிடுதல் தொழில் துறைகளில், 2019-20ம் ஆண்டில் சுமார் 14 விழுக்காடு அளவிற்கு, 450 லட்சம் பெண்கள் மற்றும் கிராமப்புற பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.