சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், குளுக்கோமா எனப்படும், கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு, கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சிலருக்கு பரிசோதிக்கப்பட்டு, மருந்துகளும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், “இந்தியாவில், 1.20 கோடிக்கு அதிகமானவர்கள் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதை அறியாதவர்களாக உள்ளனர்.