பேய்க்குளம் பகுதியில் தரமற்ற சாலை அமைப்பு கிராம மக்கள் குற்றச்சாட்டு

சாத்தான்குளம், மார்ச் 18: சாத்தான்குளம் தாலுகா ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்குள்பட்ட கருங்கடல் பனைக்குளம், சங்கநயினார்புரம்  பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் காரணமாக சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்  என்ற நோக்கில் அவசர கோலத்தில்  சாலை தரமற்று அமைக்கப்படுவதாககிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.     இந்த சாலையானது  சிறிது நாள்களில் சேதமாகி விடும் நிலையில் காணப்படுகிறது. மேலும் பழனியப்பபுரம், குருகால்பேரி, சவேரியார்புரம் பகுதியில் நல்ல நிலையில் இருந்த சாலைகளும் புதுபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய சாலைகள் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. ஆதலால் அரசு துறை அதிகாரிகள் இந்த சாலைகளை ஆய்வு செய்து தரமற்ற சாலைகளை மீண்டும் தரமுள்ள சாலையாக அமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: