×

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு; ஆக.13ம் தேதி கர்நாடகா பந்த்: கன்னட கூட்டமைப்புகள் அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறும்போது, ‘தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 13 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ‘அகண்ட கர்நாடக பந்த்’ நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிகிறது’ என்றார்.

மேலும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், வரும் 3ம் தேதி பெங்களூரு வருவதாக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி விஷயத்தில் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலையில் ஜோசப் விஜய் வர வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில் அவர் காவிரி விஷயமாக பேசுவதாக வந்தால், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் ’ என்றார்.

Tags : Cauvery Management Authority ,Karnataka Bandh ,Kannada ,Bengaluru ,MLA ,Federation of Kannada Societies ,Vattal Nagaraj ,Vattal ,Nagaraj ,Cauvery ,Tamil Nadu ,
× RELATED பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க...