×

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலையில் மாஜி ஆம்ஆத்மி கவுன்சிலருக்கு ஆயுள்

புதுடெல்லி: டெல்லி கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் மாஜி ஆம்ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவரத்தின் போது, ​​உளவுத்துறையின் அதிகாரி அங்கித் சர்மா கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், முன்னாள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசைன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கர்கர்தூமா நீதிமன்றங்களின் கூடுதல் அமர்வு நீதிபதி பர்வீன் சிங் இந்த வழக்கை விசாரித்து ஜூலை 13 அன்று தாஹிர் உசேன் மற்றும் 4 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். அதேவேளையில் மற்ற 6 பேர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவித்தது. குற்றச் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து சம்பந்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. தாஹிர் உசேன் மற்றும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags : AAP ,Delhi ,New Delhi ,Tahir Hussain ,2020 northeast ,riots ,Ankit Sharma ,AAP… ,
× RELATED பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க...