கோவில்பட்டி, மார்ச் 17: கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ பில்கள், மருத்துவ படிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 2019ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு கடைசி சம்பள நிர்ணயம் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். தொலை தொடர்பு துறையில் சேவை காலத்தில் ஈட்டி விடுப்புக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.