நெல்லை, மார்ச் 16: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரான மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மேலும் சுயேட்சைகள் இருவர் மனுக்களைத் தாக்கல் செய்தனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்டச் செயலாளருமான தச்சை கணேசராஜா, வேட்பு மனுத்தாக்கல் செய்ய நேற்று காலை 10 கார்களில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரோடு நாங்குநேரி தாலுகா அலுவலகம் வந்தார். பின்னர் நடத்தை விதிகளின் படி, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரியபெருமாள், பாஜ மாவட்டத் தலைவர் மகாராஜன் ஆகியோருடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரியான மாவட்ட வழங்கல்
அலுவலர் குழந்தைசாமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் கணேசராஜா தனது பெயரில் ரூ.8.8 கோடி சொத்தும், தனது மனைவியின் பெயரில் ரூ.1.92 கோடி சொத்தும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.