கூடலூர், மார்ச் 16: தேர்தலை முன்னிட்டு மது மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், குமுளியில் தமிழக-கேரள போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். கேரள கலால் ஆணையர் தலைமையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக-கேரள அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில் கடந்த பிப்.24ல் இருமாநில எல்லைப்பகுதி வழியாக சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் செயல்களை தடுப்பது தொடர்பாக, கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் தமிழக-கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தேர்தலை முன்னிட்டு எல்லைப்பகுதிகள் வழியாக கஞ்சா, மது மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக குமுளி, ரோசாப்புகண்டம், இரண்டாம் மைல், பாண்டிகுழி ஆகிய கேரள-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான செயல்களை தடுக்க, இருமாநில போலீஸ் அதிகாரிகளின் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.