தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டம் நடத்துவதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒசூரில் பேருந்துகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.
