பெண் கூட்டுபலாத்காரம்: 2 பேர் அதிரடி கைது

 

திருமலை: தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தை சேர்ந்த 43 வயது பெண். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார். அப்போது ஒரு வாலிபர், அவரிடம் நைசாக பேசி அவரது பிரச்னைகளை தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அமைப்பாளர்களை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி அவரை நம்பவைத்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணை, செகந்திராபாத் ராணிகஞ்சில் உள்ள பிரபலமான வணிக வளாகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர், மற்றொரு நபரை வரவழைத்து பெண்ணிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுபலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்களாம். இதுகுறித்து அந்த பெண், மகாங்காலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பெண்ணை கூட்டுபலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: