தஞ்சை, மார்ச் 12: 100 சதவீதம் வாக்களிப்போம் குறித்த மகளிர் சுய உதவி குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றனஅதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்ட பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்,இப்பேரணியில் கலந்துகொண்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம், நமது வாக்கு நமது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல தவறாமல் வாக்களிப்போம் அச்சமின்றியும், எந்தவொரு தூண்டுலுக்கும் உட்படாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ரயில்வே நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.