மதுரை: நாளை முதல் கோயில்களில், குத்தகைக்கு எடுத்த தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் தயாரித்து, கோயில் வளாகத்தில் விற்கப்படும் என அறிவித்துள்ளார்.
