- பர்கூர்
- கிருஷ்ணகிரி
- எட்டு சென்னப்பன்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- வரமலைகுண்டம்
- ஆந்திரப் பிரதேசம் குப்பம் சாலை
கிருஷ்ணகிரி, ஜூன் 30: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஏட்டு சென்னப்பன் மற்றும் போலீசார், பர்கூர் அருகே ஆந்திர மாநிலம் குப்பம் சாலையில், வரமலைகுண்டா செக்போஸ்ட் அருகே, நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், ஒப்பதவாடி பெரியார் நகரை சேர்ந்த வெங்கடேசன்(60) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
