தரங்கம்பாடி, மார்ச் 10: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதை கடந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பூம்புகார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தேர்தல் அலுவலர்கள் தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், குத்தாலம் தாசில்தார் இளங்கோ முன்னிலை வகித்தனர்.