பழநி, மார்ச் 9: கன்னியாகுமரியில் அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சார்பில் 14வது தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.