தி காவிரி மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

சேலம், மார்ச் 9: தி காவிரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்றார். தி காவிரி பொறியியல் கல்லூரி முதல்வர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறைத்தலைவர் காமாட்சி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினியை அறிமுகப்படுத்தினார். தமிழ்த்துறை தலைவர் கவிதா, சிறப்பு விருந்தினரான பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹேமாவை அறிமுகப்படுத்தினார். மகளிர் தின விழா நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், கல்வி நிறுவனங்களின் கவுரவத்தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், செயல் இயக்குநர் கருப்பண்ணன், செயல் அலுவலர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.   ...

Related Stories: