×

வீட்டு மனை தகராறில் வாட்ச்மேன் தற்கொலை

வந்தவாசி, மார்ச் 9: வந்தவாசி அடுத்த தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன்கள் ஜானகிராமன், கன்னியப்பன், ஆறுமுகம்(42). இளைய மகன் ஆறுமுகம் வந்தவாசி வெண்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு அவரது தந்தை, 3 சென்ட் வீட்டுமனை கொடுத்ததாக தெரிகிறது. இந்த வீட்டுமனையை தனது மனைவி பரமேஸ்வரி பெயரில் ஆறுமுகம் பத்திரப்பதிவு செய்து கொண்டாராம். இதனையறிந்த ஜானகிராமன், கன்னியப்பன் இருவரும், ‘எங்களுக்கு தெரியாமலேயே தந்தையிடம் வீட்டுமனை வாங்கிக் கொண்டாயே. எங்களுக்கும் கொடுக்க வேண்டும்’ எனக்கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த ஆறுமுகம் கடந்த 6ம் தேதி இரவு பள்ளியில் காவல் பணியில் ஈடுபட்டபோது, திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த அப்பகுதி மக்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற உறவினர்கள் ஆறுமுகத்தை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கொண்டு சென்றபோது வழியிலேயே ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து பரமேஸ்வரி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Watchman ,
× RELATED உழைத்தபடி படித்து சாதித்தார் இரவு...