சென்னை: பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ‘என்.எல்.சி. நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது. என்.எல்.சி.க்கு மேலும் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துணை போகிறது’ எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
