சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக சென்னை, திருச்சி, நெல்லை, கோவை,மதுரையை தலைமையிடங்களாக கொண்டு எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கம் எனவும் காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய மண்டலங்களுக்கு ஒப்புதல் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
