நெல்லை, மார்ச் 8: சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கொரோனா தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்துவதா? என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் கூட்டணி, கட்டாயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி உள்ளது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்திலுள்ள 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் 7ம் தேதி மாலை 3 மணிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும் அதன் அறிக்கையை பிற்பகல் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும், குரல் பதிவும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.