ஆட்டு வியாபாரியை தாக்கி நகை, பணம் பறிப்பு

எட்டயபுரம். மார்ச் 7: எட்டயபுரம் ருகே ஆட்டு வியாபாரியை தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது. எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் முருகன்(53), ஆட்டு வியாபாரியான இவரும், தூத்துக்குடி மேலூரைச் சேர்ந்த அழகுமுத்து மகன் சந்திரன் (63) என்ற மற்றொரு ஆட்டு வியாபாரியும் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் வாங்குவதற்காக எட்டயபுரம் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் மேலக்கரந்தைக்கு திரும்பி சென்றனர். அப்போது பின்னால் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், முருகன், சந்திரன் ஆகியோரை வழிமறித்து உருட்டு கட்டையை காட்டி மிரட்டி  அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 12 கிராம் தங்க மோதிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: