மார்த்தாண்டம்: களியக்காவிளை அருகே மெதுகும்மல் தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக் (31). கொத்தனார். அசோக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணம் ஆகாத விரக்தியில் மது குடித்து வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுந்தரேசன் கொடுத்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
