விக்கிரவாண்டி, ஜூலை 29: விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிபவர்கள் லோகநாதன்(48), பாபு(46). இந்நிலையில் நேற்று காவல்நிலையத்தில் இருவருக்கிடையே ஒரே நாளில் விடுமுறை எடுப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சக போக்குவரத்து போலீசார் இடையே சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி., மதிவாணன் இருவரையும் ஆயுதப்படை பிரிவிற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
