கம்பம், மார்ச் 6: கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பிய நிலையில், சாலை பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன; ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 8வது வார்டு செக்கடி தெருவில் கடந்த மாதம் திடீரென புதிய தார்ச்சாலை அமைக்க பணிகள் நடந்தன. இதையொட்டி சுமார் 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்களை பரப்பினர். அதன்பின் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதுவரை பணி தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.