சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் கர்ப்பிணி உள்பட 13 பேர் காயம்

கும்பகோணம், மார்ச் 5: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் கர்ப்பிணி உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். கும்பகோணம் அடுத்த திருவிடச்சேரி பகுதியில் இருந்து தனியார் பேருந்து பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. அப்போது சாக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றது. அப்போது சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் வாஞ்சியம் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி நக்மா (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா மகனான இரண்டரை வயது இன்பரசன் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: