உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெள்ளை நிறப்புலி மீண்டும் வெளியே தென்பட்டுள்ளது. 2017ல் 2 வெள்ளைப் புலிகளானது வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது ஒரு புலி அப்பகுதியில் நடமாடியதை மக்கள் பார்த்துள்ளனர். மற்றொரு புலியின் நிலை குறித்து வனத்துறை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
