காரியாபட்டி/திருவில்லி, மார்ச் 3: காரியாபட்டி, திருவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழநாட்டில் ஏப்.6ம் தேதி ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனையடுத்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் துணையுடன் தேர்தல் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.