கண்ணமங்கலம் அருகே ஆட்டோ டிரைவர், ராணுவ வீரர்கள் மோதல்: இரு தரப்பிலும் 5 பேர் கைது

 

 

கண்ணமங்கலம், மே 19: கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார்(26). ஆட்டோ டிரைவர். ஒண்ணுபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பிரபு(30). ஆட்டோ டிரைவர். இருவரும் நண்பர்கள். ஒண்ணுபுரம் அடுத்த புதுப்பாளையம் முதல் தெருவை ேசர்ந்த பாலாஜி (29). ராணுவ வீரர். தம்பி பாக்யராஜ் (28). ராணுவ வீரர். ஆரணி அடுத்த மாமண்டூர் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்ரவர்த்தி (29). ராணுவ வீரர். மூவரும் நண்பர்கள். விடுமுறையில் வந்துள்ளனர். ஜெயக்குமார், பாலாஜி இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒண்ணுபுரம் ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றி வர ஆட்டோவில் ஜெயக்குமார் சென்றுள்ளார்.

அங்கிருந்த பாலாஜி, பாக்யராஜ், சக்ரவர்த்தி ஆகிய மூவரும் ஜெயக்குமார் ஆட்டோவை வழி மடக்கி ஆபாசமாக பேசி, தொடையில் அடித்து, ஆட்டோ முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். தடுக்க வந்த பிரபுவை திட்டி, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் பாலாஜி, தன்னை ஆபசமாக திட்டி வயிற்றில் கத்தியால் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், பிரபு மீது கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

இருதரப்பு புகார்களை வழக்குப்பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பாலாஜி, பாக்யராஜ், சக்ரவர்த்தி, ஜெயக்குமார், பிரபு ஆகிய 5 பேரை கைது செய்து, ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

 

Related Stories: