ஆரணி,
மார்ச் 1: ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடாவரம் கிராமத்தை சேர்ந்தவர்
வீரராகவன்(40), இவர் சென்னையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சேல்ஸ்மேனாக
வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு
சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, அவர் வசிக்கும் பகுதியில் சில தினங்களாக
ஊராட்சியில் சார்பில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து
பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் சரிவர வராமல் இருந்தது.
இதனால்
நேற்று முன்தினம் வீரராகவன், அதே பகுதியில் உள்ள ஊராட்சி மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டி பழுப்பில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என
பார்ப்பதற்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏரிப்பார்த்தார். அப்போது
திடீரென நிலைதடுமாறி தொட்டியில் இருந்து கீழே விழுந்த படுகாயமடைந்தார்.
இதைப்பார்த்து
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆரணி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த
வீரராகவன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து
ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=====================================================================