கும்பகோணம் கோர்ட் தூய்மைபடுத்தும் பணி

கும்பகோணம், மார்ச் 1:கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.தலைமை குற்றவியல் நீதிபதி மாதவராமானுஜம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நீதித்துறை நடுவர்கள் தரணிதர், பாண்டிமகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வக்கீல்கள் சங்க செயலாளர் தரணிதரன் மற்றும் வக்கீல்கள், குமாஸ்தாக்கள், வக்கீல்கள் சங்க ஊழியர்கள், கோர்ட் ஊழியர்கள் இணைந்து ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: