புவனகிரி, மே 8: புதுச்சத்திரம் அருகே உள்ள ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த மாதம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு போலியான வீடியோ ஒன்று தயாரித்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கீழ்பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி யுவராஜ், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி அஜித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
