விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேனின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், வேன் முழுவதுமாக எரிந்து சேதமானது. வேனில் இருந்த 10 பேர் உயிர் தப்பினர். விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் எரிந்துகொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.
